தொழிலாளர்கள் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதியேற்போம் -மு.க.ஸ்டாலின்

மே தினத்தை முன்னிட்டு சென்னை மே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுத் தூபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து, உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தொழிலாளர் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார்.

இறுதியாக, தொழிலாளர்களைப் போற்றுவோம், தொழிலாளர்கள் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதியேற்போம் என்று கூறி அவர் தனது உரையை முடித்துக்கொண்டார்.

மே தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் சிவப்பு நிறச் சட்டயை அணிந்திருந்தார் என்பதுடன், ஏராளமான தொண்டர்களும் சிவப்பு நிறத்திலேயே ஆடைகளை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *