எவ்வளவு உழைத்தாலும் வியாபாரத்தை மேற்கொண்டு நடந்த முடியவில்லை! விசேட தேவையுடைய பெண் கவலை

நாட்டில் தற்போது நிலவும் இக்கட்டான நிலையில், எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வாழ்வாதரத்தை கொண்டு நடத்த முடியாமல் உள்ளது என யாழில் அன்றாட உழைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மரக்கன்று வியாபாரத்தில் ஈடுபடும் நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்:

உழைப்பாளி இல்லாத நாடு எதுவுமே இல்லை என்று உங்களுக்கே தெரியும். உழைத்து வாழும் வாழ்க்கையே மிகவும் சிறப்பானது என்று கூறியுள்ளார். அத்துடன் சமூகம் ஊடகத்துக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மூடை தூக்கும் தொழில் ஈடுபடும் நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்:

2000 ஆம் ஆண்டிலிருந்து இந்த மூடை சுமத்தல் தொழிலினை செய்கிறேன். கடந்த காலங்களை விட தற்போது விலைவாசி அதிகரித்த கஷ்ட நிலையில் அரசி 240, கோதுமை மா 230, பால்மா 1050 என காணப்படுகின்ற போதிலும் அதனை கடை முதலாளிகள் அதற்கேற்ற வகையில் தருகின்றமையால் சமாளிக்க கூடியதாக உள்ளது என்றார்.

இந்த விடயம் தொடர்பில் விசேட தேவையுடைய பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்:

மிளகாய்த்தூள் பைக்கற்றுக்களை 15 வருடகாலமாக கடைகளுக்கு மற்றும் ஊர் மக்களுக்கு விற்பனை செய்து செய்து வருவதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் இவ்வியாபாரத்தை கஷ்டமான நிலையில் கொண்டு நடத்துவதாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *