ரணசிங்க பிரேமதாசவின் 29ஆவது நினைவு தினம் இன்று

நாட்டின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

இதனை முன்னிட்டு இன்று கொழும்பு புதுக்கடை பகுதியிலுள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு மாநகர சபை உறுப்பினராக அரசியலில் பிரவேசித்து, நாட்டின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக படிப்படியாக உயர்வு கண்ட ரணசிங்க பிரேமதாச ஒப்பற்ற மக்கள் தலைவராக இன்றும் போற்றப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *