திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – சீ.வீ.கே.சிவஞானம்

திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது  வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

திலீபனை நினைவு கூர்ந்தமைக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும்   நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட மூவரை நேற்று (வியாழக்கிழமை) யாழ். பொலிஸார் கைது செய்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சீ.வீ.கே.சிவஞானம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது என்பது எமது அடிப்படை உரிமை, அதிலும் அகிம்சை வழியில் எமது இன விடுதலைக்காக உண்ணா நோன்பு இருந்து ஆகுதி ஆகிய தியாகி திலீபனை நினைவு கூராமல் தடுப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *