வவுனியா – ஓமந்தை கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 16 பேரை ஓமந்தை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் இன்று மாலை ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் தொடர்பான தீவிர விசாரணைகளை ஓமந்தை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.