எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாள் கொண்டாடப்படுகின்றது!

இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

இலங்கையில், புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்துள்ளது.

புனித சவ்வால் மாதத்திற்கான தலைபிறை பார்க்கும் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு அறிவித்த நிலையில், இஸ்லாமியர்கள் நாளைய தினமும் நோன்பு நோற்பதுடன், நாளை மறுநாள் 3 ஆம் திகதி புனித ரமழான் பண்டிகையை கொண்டாடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *