
நினைவேந்தலுக்கு யாழ்.நீதிமன்று தடை!
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்ப்பாண நீதிவான் மன்று தடை உத்தரவு வழங்கி க் கட்டளையிட்டுள்ளது.
நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதிவரை நடத்த ஏற்பாடாகியுள்ள 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸார், நீதிமன்றில் நேற்று விண்ணப்பம் செய்தனர்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை, நினைவுகூரும் நிகழ்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன், நாட்டில் நிலவும் கொரோனா பரவல் காரணமாக நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது. எனவே, திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.
அந்த விண்ணப்பத்தை ஏற்று, நீதிமன்று நினைவேந்தலுக்குத் தடை விதித்தது. எனினும் தடைக் கட்டளையில் எவருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.