திலீ­ப­னுக்கு அஞ்­ச­லி­ செ­லுத்த முற்­பட்ட கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் சென்ற பொலிஸார்!

திலீ­ப­னுக்கு அஞ்­ச­லி­ செ­லுத்த முற்­பட்ட கஜேந்திரன் எம்.பியை இழுத்துச் சென்ற பொலிஸார் வாக்­கு­மூ­லம்­பெற்று பிணை­யில் விடு­வித்தனர்!

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.கஜேந்­தி­ரன் உள்­ளிட்ட நபர்­கள் பொலி­ஸா­ரால் இழுத்­துச்­செல்­லப்­பட்டு, கைது­செய்­யப்­பட்­ட­நி­லை­யில், பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.
நல்­லூர் பின் வீதி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வி­டத்­தில் அஞ்­சலி செலுத்த முற்­பட்­ட­போதே, அங்கு நின்­றி­ருந்த பொலி­ஸார், அவரை இழுத்­துச்­சென்று பொலிஸ் வாக­னத்­தில் ஏற்­றி­னர். அவ­ரு­டன் சென்­றி­ருந்த முன்­ன­ணி­யின் மாந­கர சபை உறுப்­பி­னர் ஒரு­வ­ரும் ஆத­ர­வா­ளர் ஒரு­வ­ரும் பொலி­ஸா­ரால் கைது­செய்­யப்­பட்டு வாக­னத்­தில் ஏற்­றிச்­செல்­லப்­பட்­ட­னர்.

திலீ­ப­னின் நினை­வி­டத்­தில் நேற்­றுத்­தொ­டக்­கம் பொலி­ஸா­ரும் படை­யி­ன­ரும் கட­மை­யில் நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். இந்­த­நி­லை­யில், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கஜேந்­தி­ரன் உள்­ளிட்ட நபர்­கள், நினை­வி­டத்­தில் நேற்று அஞ்­சலி செலுத்த முற்­பட்­ட­போது, பொலி­ஸார் அத­னைத் தடுத்­த­னர். நீதி­மன்­றத் தடை­யுத்­த­ர­வின்றி தன்­னைத் தடுக்க முடி­யாது என்­று ­கூ­றிய கஜேந்­தி­ரன், தடை­களை மீறி அஞ்­சலி செலுத்த முற்­பட்­ட­வேளை, பொலி­ஸார் அவரை இழுத்­துச்­சென்று தமது வாக­னத்­தில் ஏற்­றி­னர். அவ­ரு­டன் சென்­ற­வர்­க­ளை­யும் கைது­செய்து வாக­னத்­தில் ஏற்றி பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கொண்­டு­சென்­ற­னர்.

தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டத்தை மீறி சிலரை ஒன்று திரட்டி நினை­வேந்­தல் நிகழ்வை நடத்­தி­னார் என்ற அடிப்­ப­டை­யில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் கஜேந்­தி­ரன் உள்­ளிட்ட மூவ­ருக்­கும் பி அறிக்கை தயா­ரிக்­கப்­பட்ட நிலை­யில், பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

மூவ­ரி­ட­மும் வாக்­கு­மூ­லம் பெறப்­பட்டு எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் 27ஆம் திகதி திங்­கட்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் நீதி­வான் நீதி­மன்­றில் முற்­ப­டு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்டு அவர்­கள் பொலிஸ் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

இது தொடர்­பில் யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரி­டம் கேட்­ட­போது, “கொரோனா விதி­முறை மீறல் மற்­றும் தனி­மைப்­ப­டுத்­தல் சட்­டத்தை மீறி­ய­தா­லேயே அவர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. ஆனால், எவ­ரை­யும் நாங்­கள் தாக்­க­வில்லை.” என்று தெரி­வித்­த­னர். இதே­வேளை,

திலீ­பன் நினை­வேந்­தலை தடுக்­கும்­பொ­ருட்டு பொலி­ஸார் அந்­தப் பகு­தி­யில் நிறுத்­தப்­பட்­டுள்­ள­மை­யால், அந்­தப் பகு­தி­யில் அச்­ச­மான சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.
1987 செப்­ரெம்­பர் 15ஆம் திகதி நல்­லூர் கந்­த­சு­வாமி கோவில் வடக்கு வீதி­யில், உணவு ஒறுப்பை ஆரம்­பித்த தியாக தீபம் திலீ­பன், 11ஆவது நாளான, செப்­ரெம்­பர் 26ஆம் திகதி உயிர்­நீத்­தார். அவ­ரது தியா­கத்தை நினை­வு­கூ­ரும் வகை­யில், உணவு ஒறுப்பை ஆரம்­பித்த 34ஆவது ஆண்டு நினை­வு­வா­ரம் கடந்த 15ஆம் திகதி நல்­லூ­ரில் உள்ள திலீ­ப­னின் நினை­வி­டத்­தில் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

நல்­லூர் நினை­வேந்­தல் தூபிக்­குச்­சென்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யி­னர், ஈகைச்­சு­ட­ரேற்றி திலீ­ப­னின் உரு­வப்­ப­டத்­துக்கு மலர்­மாலை அணி­வித்து அஞ்­சலி செலுத்தி வந்­த­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *