
கொழும்பு, மே 02
எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டதன் விளைவுகளை இன்று முதல் உணரமுடியுமென இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தனியார் பெற்றோலிய கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் கடந்த 30 ஆம் திகதிமுதல் சேவையிலிருந்து விலகி செயற்படுகின்றது.
அத்துடன், தாம் முன்வைத்த 60 வீத கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லையெனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

