நாட்டை முழுமையாக திறக்கவே வேண்டாம்! சுகா­தா­ரத் தரப்பு பரிந்­துரை!

நாட்டை முழுமையாக திறக்கவே வேண்டாம்! சுகா­தா­ரத் தரப்பு பரிந்­துரை!

நாட்­டில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்கை நீக்­கும்­போது, நாட்டை முழு­மை­யா­கத் திறக்க வேண்­டாம் என்று சுகா­தார அதி­கா­ரி­கள் அர­சி­டம் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.
சுகா­தார சேவை­கள் பிர­திப் பணிப்­பா­ளர் ஜென­ரல் ஹேமந்த ஹேரத் ஊட­கங்­க­ளுக்கு நேற்­றுக் கருத்­துத் தெரி­விக்­கும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

நாட்டை முழு­மை­யாக ஒரே நேரத்­தில் திறப்­ப­தற்­குப் பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை. நாடு முழு­மை­யா­கத் திறக்­கப்­ப­டு­மா­னால், நிலைமை இன்­னும் மோச­மா­கும்.
எனவே, படிப்­ப­டி­யாக நாட்­டைத் திறப்­பதே மிக­வும் பொருத்­த­மா­னது. இதன்­மூ­ல­மாக, கொரோனா பர­வ­லுக்கு வழி­வ­குக்­கும் கார­ணி­கள் உள்­ள­னவா என்று நாம் அவதா­னிக்க முடி­யும் என அவர் மேலும் தெரி­வித்­தார்.

தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டம், இது­வ­ரை­யான முடி­வின்­படி எதிர்­வ­ரும் முத­லாம் திகதி அதி­காலை 4 மணி­யு­டன் நீக்­கப்­ப­டு­கின்­றது. முத­லாம் திக­திக்­குப் பின்­னர் தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்கை நீடிக்­கும் வாய்ப்பு இல்லை என்று ஜனா­தி­பதி ஊட­கப் பிரிவு முன்­னரே அறி­வித்­துள்­ளது.
இந்­த­நி­லை­யி­லேயே, ஊர­டங்கை நீக்­கும்­போது நாட்டை முழு­மை­யா­கத் திறக்க வேண்­டாம் என்று சுகா­தார அதி­கா­ரி­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *