மின்னல் தாக்கி குடும்பஸ்தர் சாவு மற்றொருவர் காயம்!

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் சாவு மற்றொருவர் காயம்!

யாழ்ப்­பா­ணம் வெற்­றி­லைக்­கேணி பகு­தி­யில் மின்­னல் தாக்கி ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். மற்­றொ­ரு­வர் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வெற்­றி­லைக்­ கேணி கோரி­யடி கடற்­க­ரைப் பகுதி வாடி­யடி பகு­தி­யில் கரை­வலை தொழி­லில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­போதே இரண்டு மீன­வர்­க­ளும் மின்­னல் தாக்­கத்­துக்கு உள்­ளா­கி­னர். அதில், அதே பகு­தி­யைச் சேர்ந்த ஜோன்­தொம்­சன் குயின்­ரன் சுதர்­சன் (வயது – 38) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

இவர் இரண்டு பிள்­ளை­க­ளின் தந்­தை­யா­வார். சட­லம் மரு­தங்­கேணி ஆதார மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது. பொலி­ஸார் மேலதிக விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *