உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் பொரிஸ்!

உக்ரைன் நாடாளுமன்றத்தில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றவுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்ததற்கு பிறகு உக்ரைன் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆவார்.

பதிவுசெய்யப்பட்ட உரையில், கொடுங்கோன்மைக்கு எதிரான உக்ரைனின் எதிர்ப்பைப் பாராட்டி, ரஷ்யாவிற்கு எதிரான நாட்டின் தற்போதைய பாதுகாப்பிற்கு ஆதரவாக 300 மில்லியன் பவுண்டுகள் இராணுவ உதவியை பிரதமர் அறிவிப்பார்.

மேலும், பிரதமர் உக்ரைனின் சிறந்த மணிநேரத்தை பாராட்டுவார் என்றும், தங்கள் நண்பர்களிடையே இருப்பதில் பிரித்தானியா பெருமிதம் கொள்கிறது என்றும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிவ்வில் பிரித்தானிய தூதரகம் மீண்டும் திறக்கப்படும்போது அவரது கருத்துகள் ஒளிபரப்பப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *