போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு இலவச போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவிக்கையில்,
அமைதியான போராட்டங்களை நடத்துவதற்காக 20-25 கிலோமீற்றர் தூரம் பயணிக்க போதுமான பேரூந்துகளை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் தமது பேரூந்துகளை நாடாளுமன்றத்தை சுற்றி நிறுத்துவதற்கு சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்

