ஒரு தசாப்தத்திற்கு பிறகு முதல்முறையாக வட்டி வீதத்தை உயர்த்தும் அவுஸ்ரேலியா!

அவுஸ்ரேலியாவின் மத்திய வங்கி ஒரு தசாப்தத்திற்கு பிறகு, முதல்முறையாக வட்டி வீதங்களை உயர்த்தியுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, அதிக கவனம் செலுத்தும் தேர்தலுக்கு அவுஸ்ரேலியா தயாராகி வருவதால், இந்த உயர்வு, வீட்டு வரவு செலவுத் திட்டங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் ஆசிய-பசிபிக் பொருளாதாரங்களின் வளர்ந்து வரும் பட்டியலைத் தொடர்ந்து, அவுஸ்ரேலியாவின் ரிசர்வ் வங்கி (ஆர்பிஏ) இன்று (செவ்வாய்க்கிழமை) ரொக்க (பெஞ்ச்மார்க்) வட்டி வீதத்தை 0.1 சதவீதத்திலிருந்து 0.35 சதவீதமாக உயர்த்தியது.

21 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் பணவீக்கத்தை எதிர்த்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் ரிசர்வ் வங்கி ஆளுனர் பிலிப் லோவ், ‘பணவீக்கம் எதிர்பார்த்ததை விட விரைவாக அதிகரித்தாலும், வேலையின்மை குறைவாக இருந்தது மற்றும் ஊதிய வளர்ச்சி மேம்படும் என்பதற்கு சான்றுகள் உள்ளன’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *