மின்வெட்டு நேரம் நீடிக்கப்படாது: இலங்கை மின்சார சபை

கொழும்பு,மே 03

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாவது மின் உற்பத்தி இயந்திரம் செவ்வாய்க்கிழமை செயலிழந்துள்ள போதிலும், மின்வெட்டு நீடிக்கப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதால் தேசிய மின் கட்டமைப்பில் 270 மெகாவாட் மின்சார இழப்பு ஏற்படும் என்று மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோ கூறினார்.

எவ்வாறாயினும், டீசல் மற்றும் ஏனைய மின் உற்பத்தி நிலையங்களுக்கு உரிய நேரத்தில் எரிபொருள் கிடைப்பதால் மின்வெட்டை நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *