
புதிய அரசியல் அமைப்பு மற்றும் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை உப குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நாலக்க கொடஹேவா குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக, நாட்டுக்கு அவசியமான வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவரும் வகையில் அமைச்சரவை உபகுழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நாலக்க கொடஹேவா இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு விசேட நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மே மாதம் முதல் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு இவ்வாறு நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு விசேட நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.