புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு

கொழும்பு,மே 03

புதிய அரசியலமைப்பு வரைவை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவராக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, அரச பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன, நிதியமைச்சர் அலிசப்ரி, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவின் ஆரம்பகட்ட அறிக்கை கடந்த மாதம் 25ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக குறித்த உப குழுவை அமைச்சரவை நியமித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *