அவசர மானியமாக சீனாவிடமிருந்து மேலும் 300 மில்லியன் யுவான்!

<!–

அவசர மானியமாக சீனாவிடமிருந்து மேலும் 300 மில்லியன் யுவான்! – Athavan News

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு மேலும் 300 மில்லியன் யுவான் நிதியை அவசர மானியமாக சீனா வழங்கவுள்ளது.

அவசரமாக மருந்து, உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நெருக்கடி நிலைமையை நிர்வகிப்பதற்கு சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படும் அவசர மானிய தொகை சுமார் 500 மில்லியன் யுவானாக அதிகரிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதரகம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *