தற்போது நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு எவ்வாறு தீர்வு காண்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் இன்னும் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டாத காரணத்தினால் அரசியல்வாதிகளுடனான சந்திப்புகளை தவிர்ப்பதற்கு சியம் மகா நிக்காய மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் நேற்றையதினம் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மகாநாயக்க தேரரின் இந்த தீர்மானம் தொடர்பில் சமூகவலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
மகாநாயக்க தேரரின் தீர்மானம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரர் மிகவும் நேரடியான மகாநாயக்கராக விளங்கியதாகவும், மகாநாயக்கர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு தீர்வு கிடைக்கும் வரை எந்த அரசியல்வாதிகளும் தம்மைப் பார்க்க அனுமதிக்கப் போவதில்லை என்ற அவரது தீர்மானத்தை நான் வரவேற்கிறேன் என்றும் நான் எப்போதும் தெரிவித்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
