வழமைக்குத் திரும்பிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள்

கொழும்பு, மே 4: கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அத்தியாவசியமில்லாத சேவைகளுக்காக இன்று (04) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த திணைக்களம் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில், கோளாறு திருத்தம் செய்யப்பட்டு, சேவைகள் வழமைபோல இன்று இடம்பெறுமென திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *