கிராம சேவகர்கள் இன்று சுகவீன விடுமுறைப் போராட்டம்

கொழும்பு, மே 4: கிராம உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயலாளர் திராஜ் தல்பதாது தெரிவித்துள்ளார்.

நாடு முழுதுவதும் உள்ள கிராம உத்தியோகத்தர்களால் இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சில கிராம உத்தியோகத்தர்கள், கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து, காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையில் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட உள்ளதாகவும் திராஜ் தல்பதாது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *