
மருந்துகளை கொள்வனவு செய்வதில் சிக்கல் ஏற்படும் நிலையில், அதற்கு உதவும் வகையில் சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய, 1999 எனும் துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்வதன் மூலம் இந்த வசதியினை பெற்றுக்கொள்ள முடியுமென சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சந்தை மற்றும் அரச வைத்தியசாலைகளில் மருந்து பற்றாக்குறை நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சுகாதார அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.