இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் பதிலடி கொடுக்கப்படும் – அமித்ஷா

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாகவும், கூறினார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது இப்போது உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *