
கிராமிய அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்வதற்கும், வரிக் கொள்கையை திருத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாதுக்க – தம்போர, கலகெதர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், வாழ்வாதாரத் திட்டங்களையும் சுயதொழிலையும் மேம்படுத்தும் வகையில் கிராமிய அபிவிருத்திச் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் உணவு உற்பத்தி கிராமங்களாக மாற்றப்படும் என்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.