அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவரும் சமநேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றவியல் பிரேரணைகள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இன்றைய தினம் பரபரப்பான நிலையில் பாராளுமன்றம் கூடும் போது அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை தொடர்பில் விவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அரச தலைவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றவியல் பிரேரணை அர்த்தமற்றதாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.