பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை இன்றைய அமர்வுகள் இதுவரை நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேவேளை இன்றையதினம் எதிர்க் கட்சியால் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று வாதப் பிரதி வாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று பாராளுமன்ற நேரலை நிறுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வு நேரலை நிறுத்தப்பட்டமை தொடர்பில் சாணக்கியன் கண்டனம் தெரிவித்து இரா.சாணக்கியன் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
நாடாளுமன்றம் இப்போது நடக்கிறது! ஏன் என்று யோசிப்பவர்களுக்கு,
இன்று நேரலையில் இல்லை, வெளிப்படையாக இணையம் இல்லை. அல்லது சதி உள்ளதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
