யாழில் 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

யாழ்.பருத்துறை துன்னாலை – குடவத்தை பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகில் வீதியில் விழுந்து கிடந்த 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மஹிந்தன் நிரோஜன் என்ற 8 வயது சிறுவனே உயிரிழந்தார்.

இச்சிறுவன் விட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கோவில் அருகிலுள்ள வீதியில் விழுந்து கிடந்ததை அவதானித்த சிலர், சிறுவனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *