அநுரவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக பல காணிகள் இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அநுரகுமார திசாநாயக்க நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அனுரவின் கருத்துக்கு பிரதமர் அலுவலகம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த அநுரகுமார திசாநாயக்க ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின் போதே மேற்படி தகவலை வெளியிட்டிருந்தார்.

அதேவேளை பசிராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகியோரின் ஊழல்கள் தொடர்பிலான தகவலையும் அனுர வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *