அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதேவேளை பாராளுமன்றில் நேற்றையதினம் பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்கதியால் நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது.
இதேவேளை தற்போது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றும் போது தற்போதைய அரசாங்கம் தொடர்பில் கடும் அதிர்ப்தியை தெரிவித்தார்.
இது தொடர்பில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இந்த நாட்டை திவாலாக்கி விட்டீர்கள். நீங்கள் ஏற்கனவே இந்த நாட்டை வெனிசுலாஃலெபனானாக மாற்றிவிட்டீர்கள் என குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்