
கொழும்பு, மே 04
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை (05) இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமான பாராளுமன்ற அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பிரதி சபாநாயகராக இருந்த ரஞ்சித் சியம்பலாபிட்டி பதவி விலகியதை தொடர்ந்து அந்தப் பதவிக்கான நியமனம் தொடர்பில் நாளை வாக்கெடுப்பு நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.