பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்த மாணவர்கள்..!

பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை கண்டித்த அதிபரை பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்த தீ விபத்தில் பாடசாலை அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன.

குற்றச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில், அதே பாடசாலையில் படிக்கும் 12 மற்றும் 7 வயதுடைய இரண்டு மாணவர்களே இந்த சம்பவத்திற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

தவறான செயல்களுக்காக கண்டித்த அதிபர் மீது கோபம் கொண்டதே தீ வைப்புக்கான காரணம் என்று அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இரண்டு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *