அலி சப்ரி “வோட்டர்ஸ் அன்ட் கேட்டின் நைட் வோட்ச்மேன்”! – சபையில் ரணில் கிண்டல்

கஸ்டமான பணியை முன்னெடுத்துள்ள நிதியமைச்சர் அலி சப்ரி, தம்மை ”நைட்வோட்ச்மேன்” என்ற கூறியது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது கருத்ததை வெளியிட்டுள்ளார்.

”நைட்வோட்ச்மேன்” என்பது கிரிக்கட்டில் உள்ள நிலை என்பதை விட, நிதியமைச்சர் “வோட்டர்ஸ் அன்ட் கேட்டின் நைட்வோட்ச்மேன்” என்பதை ரணில் நினைவுப்படுத்தினார்.

நைட்வோட்ச்மேன் ஜனநாயக கட்சியின் தலைமையகம் உடைக்கப்பட்டதை தெரியப்படுத்திமை காரணமாகவே உப ஜனாதிபதியும், ஜனாதிபதியும் பதவி விலகினர்.

எனவே அலி சாப்ரி அதனையா செய்யப்போகிறார்? என்று ரணில் கேள்வி எழுப்பினார்.

இந்தநிலையில் நிவாரண உதவிகள் அனைத்தும் தமது ஆட்சியின்போது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய வரியை குறைத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காரணம் இல்லை அதற்கு தனியார்துறையினரே காரணம்.

இந்தநிலையில் அதிகாரிகளின் செயற்பாடுகளை பார்த்துக்கொண்டிருக்காமல், முழுப் பொறுப்புகளையும் நாடாளுமன்றுக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தாம் முன்வைத்த யோசனைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படாமையால், கோட்டாவுக்கு பதிலாக தாமே வீட்டுக்கு செல்லவேண்டியேற்பட்டதாக ரணில் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டின் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். ஜனாதிபதி, அல்லது பிரதமர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கைகள் எதிர்கட்சியினால் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த விடயத்தில் இரண்டு கிழமைகளுக்குள் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று ரணில் விக்கிரமசி்ங்க கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *