
கொழும்பு, மே 04
பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொல்துவ சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அரசாங்கத்திற்கு எதிராக இன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நாடாளுமன்ற நுழைவுச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை பொலிஸ் அதிகாரிகளின் பஸ்ஸில் ஏற்றிச் செல்லும் அதிகாரிகளை படம்பிடிப்பதை அதிகாரிகள் தடை செய்ய முற்பட்டதால், பொலிஸ் அதிகாரிகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பஸ்ஸில் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.