காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளைத்தேடி மரணமடைந்த தாய்க்கு வவுனியாவில் அஞ்சலி

காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளைத்தேடி மரணமடைந்த தாய்க்கு வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக அண்மையில் மரணமடைந்தார்.

வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அவருக்கு வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது அவரது படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *