
யாழில் டவர் நாடக மன்ற அரங்க மண்டபம் இன்று தமிழ் மொழியில் ஆரம்பிக்கப்பட்டது.
இம்மன்றத்தின் பிரதிப்பணிப்பாளர் கலாநிதி சண்முகசர்மா ஜெயபிரகாஷ் சமூகம் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் டவர் மண்டப அரங்க மன்றத்தின் தமிழ் மொழியிலான உயர் நாடக டிப்ளோமா பாடநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடநெறிகளை கற்ற மாணவர்கள் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கல்விமானி கற்கை முடித்து நாடகமும் அரங்கியலும் கல்விமானி பட்டத்துடன் ஆசிரியத்துவத்துக்கு உள்வாங்கப்பட கூடிய வாய்ப்பு இந்த பாடநெறியில் உள்ளது.
இந்த உயர் டிப்ளோமா கற்கைநெறியானது இரண்டு வருடத்துக்குரியதாகும். இதனை பூர்த்தி செய்தவர்கள் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் கல்விமானி கற்கைநெறி படிக்கலாம்.
இந்த கற்கைநெறியானது சிங்கள மொழியில் 1997 ஆம் ஆண்டிலிருந்து உள்ளது. 2007 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் திறந்தவெளி பல்கலைக்கழகத்தினுடன் இணைந்து இந்த பட்டத்தினை வழங்கும் செயற்பாட்டினை செய்தது.
மேலும் மேற்குறிப்பிடப்பட்ட கற்கைநெறியானது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என நாட்டின் பிரதமர் மற்றும் வீரோ விக்கிரமநாயக்க அமைச்சரும் முயன்று டவர் மன்ற அரங்க மண்டபத்தின் பணிப்பாளர் நாயகம் D.M .S திசாநாயக்காவின் கடுமையான முயற்சியில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருக்கின்றோம் என்றார்.