நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் உக்ரைனில் தாக்குதல் – ரஷ்யா

நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் உக்ரைனில் உள்ள இலக்குகளை நோக்கி இரண்டு கலிபர் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனில் விசேட இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

இந்நிலையில் கருங்கடலில் உள்ள ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றின் மூலம் குறித்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்களை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *