அலரிமாளிகை நடைபாதை விவகாரம் – நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு

அலரி மாளிகைக்கு எதிரில் நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் மற்றும் போராட்டகார்கள் அமைத்துள்ள சட்டவிரோத கூடாரங்களை அப்புறப்படுத்துமாறு வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தாதது சம்பந்தமாக எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கத்தை முன்வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகரி மற்றும் சட்டமா அதிபருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடயம் சம்பந்தமாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் செய்திருந்த முறைப்பாடு தொடர்பாக இரண்டு பிரதிவாதிகள் செய்த முறைப்பாட்டை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *