புகையிரத சேவைகள் நிறுத்தம்- விசேட அறிவிப்பு வெளியாகியது.

நாளை நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது நாளைமறுதினம்(06) நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் புகையிரத இயக்கப் பணிகள், தொழிற்பாடுகள், புகையிரத கட்டுப்பாட்டுப் பணிகள், புகையிரத நிலைய அதிபர்கள், புகையிரத இயந்திர சாரதிகள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் இந்நிலையில் தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *