போராட்டங்கள் குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் விடுத்த கருத்து

கொழும்பு,மே 04

நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்ளை பொலிஸார் கைது செய்தமைக்கு அமெரிக்க தூதுவர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கைதுக்கு அஞ்சாமல் போராட்டம் நடத்தும் சுதந்திரம் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம் எனவும் அவர் தெரிவித்தார்.

வன்முறையை புறக்கணிக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதுடன், அமைதியான போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *