நுவரெலியாவில் வியாபார ஸ்தலங்களை மூடத் தீர்மானம்

நுவரெலியா,மே 04

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நுவரெலியா நகரில் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக அன்றைய தினம் வியாபார ஸ்தலங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கறுப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிக்காட்ட வேண்டும் என்பதோடு வியாழக்கிழமை வாடிக்கையாளர் நலன் கருதி 6 ஆம் திகதி தமது வியாபார நிலையம் மூடப்படும் என அறிவித்தல் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் நுவரெலியா வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் டக்ளஸ் நாணயக்கார, பொருளாளர் வசீகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *