நாடாளுமன்ற வளாக்கத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானவர்களுக்கு அமோக வரவேற்பு!

நாடாளுமன்ற வளாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 பேரும் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடுவெல நீதவான் சனிமா விஜேபண்டார நேற்று மாலை இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இதனையடுத்து, வெளியில் வந்த அவர்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தலங்கம பொலிஸாரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

10 ஆண்களும் இரண்டு பெண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அத்தோடு, நாடாளுமன்றத்தின் தனி நுழைவாயிலில் தனியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *