மாத்தளையில் குரங்காக மாறிய விவசாயிகள்!

மாத்தளை பகுதியில் குரங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் குரங்கு வேடமணிந்தபடி விவசாய நிலங்களில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.

தம்புள்ளை மற்றும் கலேவெல கிராமங்களில் குரங்குகளின் தொல்லையால் விவசாயிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். குரங்குகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர்கள், தொடர்புடைய அரச திணைக்களங்களை கேட்டுக் கொண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், பயிர்களை காப்பதற்காக விவசாயிகள் குரங்கு வேடமணிந்தபடி காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், விவசாயிகளின் புதிய தோற்றத்தை கண்ட குரங்குகள் பீதியடைந்த தப்பி ஓடி விடுவதாக தெரிவித்த விவசாயிகள், தமது இந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *