ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீடிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையதினம் (வெள்ளிக்கிழமை) வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

ரமழான் பண்டிகையின்போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் 4 பொலிஸார் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் இதுவரை 140 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் குறித்த பகுதியில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *