டீசல் தட்டுப்பாடு: காஞ்சன விஜேசேகர

கொழும்பு, மே 05

இலங்கையில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், நாட்டுக்கு நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன்  டீசல் தேவைப்படுவதாகவும் ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 1000- 1500 மெற்றிக் டன் டீசல் மட்டுமே வெளியிடப்படுவதாக தெரிவித்தார்.

மின் உற்பத்திக்கு தேவையான டீசல் ஒதுக்கீடுகளை வழங்குவதே இதற்குக் காரணம் என்றார்.  அடுத்த டீசல் ஏற்றுமதி மே 11 ஆம் திகதி  வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  எவ்வாறாயினும், நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்த அவர், போதியளவு கையிருப்பு அமைச்சிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். 

Leave a Reply