வேக கட்டுப்பாட்டை இழந்து வல்லைப் பாலத்துடன் மோதிய வாகனம்!

பருத்தித்துறை யாழ்ப்பாணமம் வீதியில் வல்லைப் பாலத்தில் முன் சில் காற்று போன நிலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதி பிக்கப் ரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து, இன்று சனிக்கிழமை மதியம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தெய்வாதீனமாக சாரதி மற்றும் அதில் பயணித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி ஆகியோர் சிறு காயங்களுடன் அதிஸ்ரவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

குறித்த விபத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபை வாகனமே பலத்த வேதத்திற்கு உள்ளாகியுள்ளது. அச்சுவேலி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *