
எதிர்கட்சிகளின் பலத்தை காட்டும் சந்தர்பத்தை எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, காட்டிக் கொடுத்து விட்டதாக புதிய பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ள ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை வரை தம்மை பிரதி சபாநாயகராக தெரிவுசெய்வது என்ற முடிவுக்கு எதிர்கட்சியும் இணக்கம் வெளியிட்டிருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் எதிர்கட்சி காட்டிக் கொடுத்துவிட்டதாகவும், இதன் மூலம் வெளியில் இடம்பெறும் போராட்டங்களை எதிர்கட்சி காட்டிக்கொடுத்து விட்டதாகவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்.
அரசாங்க கட்சி தமது தெரிவுக்கு விருப்பம் வெளியிட்டபோதும், நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென்றும் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டார்