மட்டக்களப்பிற்கு லொஹான் ரத்வத்த விஜயம்!

தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்நிலையில், குறித்த நிகழ்வுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் சந்திரகுமாரே, இராஜாங்க அமைச்சரை அழைத்து, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்காது இரகசியமான முறையில் கூட்டம் நடத்தியுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அத்துடன், சிறைக்கைதிகளை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இராஜாங்க அமைச்சரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து செங்கம்பள வரவேற்பு வழங்கும் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார், எப்படி தமிழ் மக்களுக்கு நல்லது செய்யப்போகிறார் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *