
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை பிரதேச சபையின் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இன்றைய சபை அமர்வில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வாகன தரிப்பிடம் வழங்குவது தொடர்பாகவும் மற்றும் பிரதேச சபையினால் அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தங்கள் தொடர்பிலும் வருகின்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவ வாகனத் தரிப்பிடத்திற்கு அறவிடப்படுகின்ற கட்டணங்கள் தொடர்பில் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து பிரதேச சபை தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களால் வழங்குகின்ற சேவைகள் தொடர்பிலான கட்டணங்களை அதிகரித்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நினைவேந்தல் கட்டமைப்பு செய்ய வேண்டும் எனவும் அதற்கான ஒத்துழைப்புக்களை பிரதேச சபை வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் இதன்போது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.