
யாழ்ப்பாணம்,மே 05
யாழில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜே. வி. பி. இன் யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் ஹர்த்தால் மற்றும் மக்களின் பங்களிப்பு சம்பந்தமாகவும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் .
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வெள்ளிக்கிழமை விசேடமாக 4000 ற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றுசேர்ந்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் என்ற பெயரின் கீழ், நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டத்தை அதாவது ஹர்த்தால் ஒன்றை அனுஷ்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது.
அந்த நடவடிக்கைக்கு முழு நாட்டு மக்களும் அதற்கு தயாராக இருக்கின்றனர். ஏனெனில் மக்களை வதைக்கும் அரசாங்கத்தினை விரட்டி அடிப்பதற்கான தீர்மானத்தை முழு நாட்டு மக்களும் எடுத்துள்ளனர்.
மக்களின் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்த்து வைக்க முடியாத அரசாங்கம் ஆக மாறியுள்ளது. போராட்டம் என்பது மக்களின் வெறுமையான போராட்டம் இல்லை. இன்று மக்கள் அல்லல்படும் விடயம் ஆகும்.
இலங்கையில் வாழும் மக்கள் இந்தியாவிற்கு செல்கின்றனர். இன்று முழு வடமாகாணமும் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளது. இதிலிருந்து மக்களை மீட்டு எடுக்கும் தேவை எங்களிடம் இருக்கிறது. அந்த வகையில் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து முழு நாட்டு மக்களுமே ஜாதி, இன, மத பேதங்களுக்கு அப்பால் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டதிற்கு எங்களுடைய உங்களுடைய பூரண ஆதரவினை தாருங்கள் என்று மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலும் தேசிய மக்கள் சக்தி என்ற வகையிலும் யாழில் வாழும் அனைத்து மக்களிற்கும் நாங்கள் அறைகூவல் விடுகின்றோம் என்றும் அன்பாக கேட்டுக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.