
ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் நாளைய தினம் (06) இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது
நாடளாவிய ரீதியாக நாளை ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன் காரணமாக, இவ்வாறு சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.